பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 12 ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த நூல்களை நடிகர் ரஜினிகாந்திடம், நயினார் நாகேந்திரன் இன்று நேரில் வழங்கினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்குச் சென்ற நயினார் நாகேந்திரன், அவரைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறப்பு நூல்களை ரஜினிகாந்திடம் அவர் பரிசளித்தார்.
இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரதமர் மோடியின் திட்டங்கள் குறித்து ரஜினிகாந்துக்கு விளக்கும் வகையில் இந்த நூல்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த், பிரதமர் மோடியின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்து, நயினார் நாகேந்திரனுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.