கலிபோர்னியாவின் மோஜாவே பாலைவனத்தில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்தில் சோதனை பறப்பின் போது அமெரிக்காவின் B-52 போர் விமானம் விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சில வினாடிகளிலேயே கட்டுப்பாட்டை இழந்த விமானம், தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்து நாசமானது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 8 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை ஓட்டத்தின் போது நிகழ்ந்த இந்த துயர சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
விபத்து குறித்து மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை ராணுவம் தெரிவித்துள்ளது.