சிறுநீரக கற்கள் மிகுந்த வேதனையைத் தரக்கூடியவை. இதனால் வயிறு முதல் இடுப்பு வரை வலி ஏற்படலாம். இந்த கற்களை இயற்கையான முறையில் கரைப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.
துளசி தேநீர், அசிட்டிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும். இது சிறுநீரக கற்களால் ஏற்படும் வலியைக் குறைப்பதுடன், சிறிய கற்களைக் கரைக்கவும் உதவுகிறது. மேலும், துளசியில் உள்ள லிதியாசிஸ் எதிர்ப்பு பண்புகள், கற்கள் உருவாவதைத் தடுக்கவும் துணைபுரிகின்றன.
ஆப்பிள் சைடர் வினிகர், சிறுநீரகத்தில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்கிறது. இது உடலில் ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. சிறுநீரக நோய்களைத் தடுப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம், சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும்.
தினமும் 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது, சிறுநீரக கற்களை வெளியேற்ற ஒரு எளிய வழியாகும். தண்ணீருடன், மாதுளை சாறு, எலுமிச்சை சாறு அல்லது சூப் போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட பழச்சாறுகளும் சிறிய கற்களை வெளியேற்ற உதவும்.