மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஒரு பேன்சி கடையில் பணிபுரிந்த 17 வயது சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தகவலறிந்த சிங்கப்பெண் அதிரடிப்படை உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்தது. ஆனால், அதிரடிப்படை வருவதை அறிந்ததும், இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் உடனடியாக சிறுமியை பத்திரமாக மீட்டனர்.
விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமி அந்த பேன்சி கடையில் வேலை செய்து வருவது தெரியவந்துள்ளது. மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த இளைஞரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமி திருமணம் சட்டப்படி குற்றம் என்பதால், தப்பியோடிய இளைஞரை கைது செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.