கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதுள்ள அதே இடத்தில் மேலும் 4 கிணறுகளை அமைக்க அரசு முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இது கடல் வாழ் உயிரினங்களுக்கு மட்டுமல்லாது, கடல்சார்ந்து வாழும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும், மீனவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.