MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஓட்டுநர் உரிமம்: 50 வயதுக்கு பின் புதுப்பித்தல்? மத்திய அரசின் புதிய திட்டம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > ஓட்டுநர் உரிமம்: 50 வயதுக்கு பின் புதுப்பித்தல்? மத்திய அரசின் புதிய திட்டம்!
லைஃப் ஸ்டைல்

ஓட்டுநர் உரிமம்: 50 வயதுக்கு பின் புதுப்பித்தல்? மத்திய அரசின் புதிய திட்டம்!

Admin
Last updated: June 11, 2026 6:52 am
Admin
Share
SHARE

ஓட்டுநர் உரிமம் தொடர்பான விதிகளில் மத்திய அரசு மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தற்போது 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், ஓட்டுநர்களின் 50 வயதுக்குப் பிறகு புதுப்பிக்கும் புதிய நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உதாரணமாக, ஒருவர் 20 வயதில் உரிமம் பெற்றால், தற்போது 40 வயதில் புதுப்பிக்க வேண்டும். புதிய நடைமுறைப்படி, அவருக்கு 50 வயதாகும் வரை உரிமம் செல்லுபடியாகும். இதனால் கூடுதலாக 10 ஆண்டுகள் உரிமம் பயன்பாட்டில் இருக்கும். 50 வயதைக் கடந்தவர்கள் உரிமம் பெற மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட உள்ளது.

இந்த மாற்றங்களால் அடிக்கடி உரிமம் புதுப்பிக்க வேண்டிய அவசியம் குறையும் என்றும், பொதுமக்களின் நேரமும் பணமும் மிச்சமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகன உரிமை மாற்றம், வணிக வாகனங்களுக்கான அனுமதிப் பத்திரங்கள், முகவரி மாற்றம், நகல் உரிமம் பெறுதல் போன்ற பல்வேறு சேவைகளை இனி முழுமையாக இணையவழியில் மேற்கொள்ளும் வசதியையும் மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு (RTO) நேரில் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை குறையும் என்றும், சேவைகள் விரைவாகவும் வெளிப்படையாகவும் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து கட்டணங்களும் ஆன்லைன் மூலம் வசூலிக்கப்படுவதால் மாநில அரசுகளின் வருவாயில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிப்பதன் மூலம் நிர்வாகத் திறன் மேம்படும் என்றும் கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த தரவுத்தளத்தின் மூலம் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் தகவல்களை நாடு முழுவதும் எளிதாக சரிபார்க்கும் வசதியும் உருவாக்கப்பட உள்ளது. இது நிர்வாகத்தை மேலும் எளிதாக்கும்.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு எதிர்மறைப் புள்ளிகள் (Negative Points) வழங்கும் புதிய முறையையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. சிவப்பு விளக்கை மீறுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் இயக்குதல், ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட் அணியாதது போன்ற விதிமீறல்களுக்கு குறிப்பிட்ட அளவு புள்ளிகள் குறைக்கப்படும். ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டி விதிமீறல்கள் பதிவானால், ஓட்டுநரின் உரிமத்தை தற்காலிகமாக இடைநீக்கம் செய்வது அல்லது நிரந்தரமாக ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படலாம். சாலை விபத்துகளை குறைத்து, பொறுப்பான ஓட்டுநர் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த மாற்றங்கள் வடிவமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Driving Licenseroad safetyஓட்டுநர் உரிமம்புதிய நடைமுறைமத்திய அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: கோழிக்கோடு நபர் ஒருவருக்கு தொற்று உறுதி
Next Article அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

முதலமைச்சர் விஜய் நாளை தொடங்கும் சிங்கப்பெண் திட்டம்

முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா நடைபெற உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பல் மற்றும் ஈறு பிரச்சனைகளை தீர்க்கும் கற்பூரவள்ளி கீரை!

பல் மற்றும் ஈறு பிரச்சனைகளை சரிசெய்யும் கற்பூரவள்ளி கீரை பற்றிய சிறப்பு தகவல்கள். மேலும், 10 வகையான கீரைகளின் மருத்துவ குணங்களும் இதில் அடங்கும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

த.வெ.க.வில் இணையிறார் விஜயபாஸ்கர்: ஆதரவாளர்களுடன் இணைப்பு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தனது ஆதரவாளர்களுடன் அடுத்த வாரம் த.வெ.க. கட்சியில் இணைய உள்ளார். இந்த இணைப்பு, புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சென்னையில் 29 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்: காவல் ஆணையர் உத்தரவு

சென்னையில் 29 காவல் ஆய்வாளர்கள் நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆணையர் அமல்ராஜ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?