சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் இந்திய ஒன்றிய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலை உயர்வு சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும் நிலையில், இந்த அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
விலை உயர்வை திரும்பப்பெறாவிட்டால், மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்படும் என்றும், இதுகுறித்து ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.