ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திட்டமிட்டு செயல்படும் காலமாக அமையும். ராசி அதிபதி சுக்கிரன், மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் செவ்வாயின் பார்வையில் குருவுடன் இணைந்துள்ளார். இதனால், கடந்த கால சிந்தனைகளை விட எதிர்காலம் குறித்த எண்ணங்கள் மேலோங்கும். சகல நன்மைகளையும் அடையக்கூடிய இந்த காலகட்டத்தில், உங்கள் குடும்ப உறவுகளின் ஆதரவுடன் திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.
செல்வாக்கும் புகழும் கூடும். பணவரவு உயர்ந்து, தொழிலில் வெற்றி நடை போடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் குவியும். சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று பொருளீட்டும் வாய்ப்புகளையும் பெறுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அது கிடைக்கும்.
வீட்டில் சுப நிகழ்ச்சிகள், விசேஷங்கள் நடைபெறும். மன இறுக்கம் குறைந்து, கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நிலவிய நெருக்கடிகள் நீங்கும். சுப செலவுகளுக்காக விண்ணப்பித்திருந்த கடன் தொகை இந்த வாரத்தில் கிடைத்துவிடும்.
சிலருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இருப்பினும், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடுவது நன்மை தரும். 'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406.