MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 1.2 கோடி மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்: காவேரி கூக்குரல் இயக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 1.2 கோடி மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்: காவேரி கூக்குரல் இயக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - 1.2 கோடி மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்: காவேரி கூக்குரல் இயக்கம்

லைஃப் ஸ்டைல்

1.2 கோடி மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்: காவேரி கூக்குரல் இயக்கம்

Admin
Last updated: ஜூன் 6, 2026 12:25 மணி
Admin
Share
SHARE

சத்குருவின் 'மண் காப்போம் – காவேரி கூக்குரல்' இயக்கத்தின் சார்பில், இந்தாண்டு 1.2 கோடி மரக்கன்றுகள் நடும் மாபெரும் பணி இன்று (05/06/2026) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுவையில் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. இதுவரை இந்த இயக்கம் மூலம் 13.4 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற தொடக்க விழாவில், சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், சைதை எம்எல்ஏ அருள் பிரகாசம், திரைப்பட தயாரிப்பாளர் ஷோபா சந்திரசேகர், கல்லூரித் தலைவர் தேவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு பணிகளைத் துவக்கி வைத்தனர். புதுவையில் முதல்வர் ரங்கசாமி மரம் நடும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், 'நோயற்ற வாழ்விற்கு சுற்றுச்சூழல் அவசியம் என்பதை ஈஷா தனது செயல்பாடுகள் மூலம் உணர்த்துகிறது. காவேரி கூக்குரல் போன்ற இயக்கங்கள் மூலம் மரவளர்ப்பை முன்னெடுப்பது பொருத்தமானது. வனவளம் பெருகினால் மழை அதிகமாகி விவசாய உற்பத்தி பெருகும். முதலமைச்சர், வனவளத்தை அதிகரிக்கவும், நீர்நிலைகளில் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதைத் தடுக்கவும், காற்று மாசுபடுவதைத் தவிர்க்கவும், கூவம் நதியை மீட்டெடுக்கவும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வருகிறார்' எனத் தெரிவித்தார்.

திரைப்பட தயாரிப்பாளர் ஷோபா சந்திரசேகர் பேசுகையில், 'மண்ணையும் மரத்தையும் போல பிறருக்குப் பயனுள்ளதாக வாழ்வதே சிறப்பு. மரங்கள் வானத்தை நோக்கி பூமி எழுதிய கவிதைகள். மண் காப்போம் இயக்கத்தை உருவாக்கிய சத்குருவிற்கு நன்றி. இந்த இயக்கம் இதுவரை 13.4 கோடி மரங்களை விவசாய நிலங்களில் நட்டு, 2.6 லட்சம் விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாற்றியுள்ளது. கடலூரில் உள்ள காவேரி கூக்குரல் நாற்றுப்பண்ணை ஆசியாவின் மிகப்பெரியதும், பெண்களால் நிர்வகிக்கப்படுவதுமான பண்ணையாகும்' என்றார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்த விழாக்களில், 1,00,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, 317 ஏக்கர் பரப்பளவில் மரம் சார்ந்த விவசாயம் மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 'பருவநிலைக்காக, நமது எதிர்காலத்திற்காக இயற்கையிலிருந்து உத்வேகம் பெறுவோம்' என்ற ஐநா-வின் கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. காவேரி நதியை புத்துயிர் பெறச் செய்வதோடு, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் இந்த இயக்கம் செயல்படுகிறது.

மரம் சார்ந்த விவசாயத்தில், பயிர்களுடன் பொருளாதார மதிப்புள்ள மரங்களும் வளர்க்கப்படுகின்றன. இந்த விவசாய முறையால் மண் வளம், நதிநீர் வளம், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் வருமானம் ஒரே நேரத்தில் மேம்படுவதால் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களின் வருமானத்தை 3 முதல் 5 மடங்கு வரை அதிகரிக்க முடியும். ஈஷா நாற்றுப்பண்ணைகள் மூலம் தேக்கு, செம்மரம், சந்தனம் போன்ற மதிப்புமிக்க மரக்கன்றுகளும், மிளகு, அவகாடோ போன்ற பயிர்களின் கன்றுகளும் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.

கடலூர் நாற்றுப்பண்ணையில் ஆண்டுதோறும் 85 லட்சம் மரக்கன்றுகளும், திருவண்ணாமலை நாற்றுப்பண்ணையில் 15 லட்சம் மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த இரு பண்ணைகளும் இணைந்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் மரக்கன்றுகளை வழங்கி, மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் பணியில் முக்கிய பங்காற்றி வருகின்றன. மரக்கன்று நடவு மற்றும் பராமரிப்பு தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களையும் காவேரி கூக்குரல் இயக்கம் இலவசமாக வழங்கி வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tree Plantingகாவேரி கூக்குரல்சுற்றுச்சூழல்மண் காப்போம்மரக்கன்றுகள்விவசாயம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மனைவியை ஓட ஓட வெட்டிய கணவன்: தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்
Next Article ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவை மாற்றம்: தண்டவாள பராமரிப்பு பணி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது

பெல்லட் துப்பாக்கி குண்டுகள்: தன்மை என்ன? – ஒரு பார்வை

டெல்லியில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த துணை ராணுவப் படையினர் பயன்படுத்திய பெல்லட்…

ஜூலை 24, 2026

வினாத்தாள் கசிவு: 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம் – சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

தேர்வு வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள்…

ஜூலை 24, 2026

சிஜேபி பிரதிநிதிகளுடன் பேசியது என்ன? – மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கம்

சிஜேபி பிரதிநிதிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்குள் விவாதிக்கப்பட்டு…

ஜூலை 24, 2026

மும்பை டிராஃபிக்கில் உருவான ‘டிராஃபிக் வடா பாவ்’ – பீட்சா டெலிவரி பாயின் அசத்தல் வெற்றி!

மும்பையின் போக்குவரத்து நெரிசலில் இருந்து உருவான 'டிராஃபிக்…

ஜூலை 24, 2026

இமாச்சலில் பயங்கரம்: பாறை சரிந்து 13 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் டாடா சுமோ…

ஜூலை 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

இந்தியா vs ஆப்கானிஸ்தான்: தர்மசாலாவில் முதல் ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தர்மசாலாவில் தொடங்குகிறது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஈரான் போர் நிறுத்தம்: ஹார்முஸ் நீரிணை திறப்பு, அணு ஆயுத ஒப்பந்தம்

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இதன் மூலம் ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் திறக்கப்படும் என்றும், ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

வந்தே பாரத் ரயில்களில் உடனடி முன்பதிவு: பயணிகளுக்கு குட் நியூஸ்

வந்தே பாரத் ரயில்களில் உடனடி முன்பதிவு திட்டம் அறிமுகம். கடைசி நேரத்திலும் பயணிகள் இனி எளிதாக பயணம் செய்யலாம். பயணிகளுக்கு இது ஒரு நல்ல செய்தி.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம்: முதல்வர் விஜய்க்கு முக்கிய வாய்ப்பு

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் 11வது ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் தொடங்கியது. இதில் தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு மாநில திட்டங்களை முன்வைக்க முக்கிய…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?