தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 7 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழையகரியப்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்த பாபுவின் மனைவி சிவஞானம் (28), சம்பவத்தன்று இரவு தனது பெற்றோர், தங்கை, தம்பி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், சிவஞானத்தின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இதுகுறித்து சிவஞானம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.