சிறு சிறு உடல்நலக் கோளாறுகளுக்கு உடனடியாக மருத்துவரை அணுகாமல், நமது சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே பல நோய்களை செலவின்றி குணப்படுத்தலாம். அந்த வகையில், அன்றாடம் பயன்படுத்தும் சில சமையல் பொருட்கள் மூலம் நோய்களை எப்படி குணப்படுத்துவது என்பதை இங்கு காண்போம்.
பூண்டு, நுரையீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. தினமும் உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது, நுரையீரல் புற்றுநோயைக்கூட தடுக்க உதவும். மேலும், பூண்டில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி, நுரையீரல் தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே, தினமும் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டை உட்கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
துளசி, அனைத்து வகையான சுவாசப் பிரச்சனைகளுக்கும் ஒரு சிறந்த மூலிகையாகும். துளசி இலையை மென்று சாப்பிடுவதன் மூலம் சுவாசப் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். இது சுவாச மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
மிளகில் வைட்டமின் சி, ஃபிளவனாய்டு, ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளன. தினசரி உணவில் மிளகைச் சேர்த்துக்கொள்வது, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து நிரந்தர தீர்வைக் கொடுக்கும். மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
மஞ்சளில் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை அதிகமாக உள்ளது. தினமும் மஞ்சள் உட்கொள்வது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வேகமாக அதிகரிக்கச் செய்யும். இது சளி, தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகளை நீக்கி, ஆரோக்கியமான வாழ்வை வாழ உதவும்.