14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி நார்வேயின் ஆஸ்லோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 6 வீரர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 10 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில், ஓபன் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரரும் உலக சாம்பியனுமான குகேஷ், அமெரிக்காவின் வெஸ்லி சோவை எதிர்கொண்டார்.
கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 116-வது நகர்த்தலில் ஆட்டத்தை டிரா செய்தார். பின்னர், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஆர்மகேட்டன் முறையில் விளையாடியபோது, குகேஷ் 27-வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
மற்றொரு இந்திய வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா, இந்தப் போட்டியின் 60-வது நகர்த்தலில் பிரான்ஸ் வீரர் அலிரெஜா பிரோஸ்ஜாவிடம் தோல்வியை தழுவினார். இதனால் இரு இந்திய வீரர்களும் தங்களது ஆட்டங்களில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
இந்த போட்டி முடிவுகள் இந்திய செஸ் ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. அடுத்தடுத்த சுற்றுகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.