MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காவிரி நீர்: ஜூன் மாதத்துக்கான 9.91 டிஎம்சி வழங்க வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காவிரி நீர்: ஜூன் மாதத்துக்கான 9.91 டிஎம்சி வழங்க வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - காவிரி நீர்: ஜூன் மாதத்துக்கான 9.91 டிஎம்சி வழங்க வலியுறுத்தல்

அரசியல்

காவிரி நீர்: ஜூன் மாதத்துக்கான 9.91 டிஎம்சி வழங்க வலியுறுத்தல்

Admin
Last updated: மே 27, 2026 8:56 காலை
Admin
Share
SHARE

தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் 9.91 டிஎம்சி காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. டெல்லியில் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டத்தில், தமிழகத்தின் உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு காணொலி காட்சி மூலம் பங்கேற்று தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்தார்.

கூட்டத்தில் பேசிய தமிழக உறுப்பினர், மேட்டூர் அணையில் தற்போது 40.742 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளதாகவும், குடிநீர், தொழிற்சாலை பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக வினாடிக்கு 1,003 கன அடி நீர் திறந்து விடப்படுவதாகவும் தெரிவித்தார். நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் (2025-26) ஜூன் 1 முதல் மே 24 வரை பில்லிகுண்டுலுவில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவு 176.685 டிஎம்சி ஆகும். இதுவரை கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் உட்பட மொத்தம் 329.166 டிஎம்சி நீர் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது.

கர்நாடக உறுப்பினர், தாங்கள் வழங்கிய உபரி நீரையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், இதனை தமிழக உறுப்பினர் சத்யபிரதா சாகு எதிர்த்தார். கர்நாடகம் தனது நீர்த்தேக்கங்களில் தேக்க முடியாமல் வெளியேற்றிய உபரி நீரை தங்களுக்கு சாதகமாக சொந்தம் கொண்டாட முடியாது என்றும், அதனை தமிழகத்திற்கு வழங்கிய கணக்கில் சேர்க்க இயலாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, மே 26 அன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும், இப்பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளதாலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், வரும் ஜூன் மாதத்திற்கு தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய 9.91 டிஎம்சி நீரை பில்லிகுண்டுலுவில் கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் காவிரி நீர்மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cauvery WaterTamil Naduகர்நாடகம்காவிரி நீர்தமிழகம்நீர் மேலாண்மை ஆணையம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பசுவதைக்கு தடை: அவசர மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
Next Article 5 மணி நேரத்தில் குழந்தை மீட்பு: தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் முதல்வர் தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள் அழிப்பு நிகழ்ச்சி

அசாம் முதல்வர்: ரூ.472 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு

அசாம் மாநிலத்தில் ரூ.472 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை காவல் துறையினர் அழித்தனர். போதைப்பொருள்…

ஜூலை 13, 2026

சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்: உண்ணாவிரத போராட்டம் தீவிரம்

லடாக்கை 6வது அட்டவணையின் கீழ் கொண்டுவர வலியுறுத்தி…

ஜூலை 13, 2026

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர்,…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

எடப்பாடி ஆட்சியிலும் மின்வெட்டு இருந்தது: அமைச்சர் செங்கோட்டையன்

விவசாயிகளைக் காக்க காவிரியில் கூடுதல் நீர் திறக்க முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் மின்வெட்டு இருந்தது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

1 Min Read
அரசியல்

அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட சி.பி.ஐ வலியுறுத்தல்

கீழடி அகழாய்வு குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசு அறிக்கையை திருத்தம் செய்ய அழுத்தம்…

1 Min Read
அரசியல்

மேகேதாட்டு திட்டத்தை காங்கிரஸ் தடுக்கும்: கனிமொழி நம்பிக்கை

கர்நாடகாவின் மேகேதாட்டு அணை திட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தடுத்து நிறுத்தும் என திமுக எம்.பி கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ள…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்டப்பட்டது!

தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலைக்கு வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?