வங்கதேசம் 260 இலக்கு நிர்ணயித்தால் நிச்சயமாக அதை விரட்டுவோம்: பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா..!

வங்கதேசம்- பாகிஸ்தான் இடையிலான போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் வங்கதேசம் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வங்கதேசம் 179 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

நாளை கடைசி நாள் ஆட்டம் மட்டுமே உள்ளது. இதனால் வங்கதேசம் விரைவாக ரன்கள் அடித்து பாகிஸ்தானுக்கு இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் வங்கதேசம் எங்களுக்கு 260 ரன்கள் இலக்கு நிர்ணயித்தால், நாங்கள் அதை துரத்துவோம் என்று பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார்.

சல்மான் ஆகா முதல் இன்னிங்சில் 58 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் முதல் இன்னிங்சில் 413 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் முதன் இன்னிங்சில் 386 ரன்களில் ஆல்அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version