எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்

விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் இன்று காலை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். சபாநாயகர் பிரபாகர், விஜயபாஸ்கரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார்.

இந்த ராஜினாமாவால் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் மேலும் சரிந்துள்ளது. ஏற்கனவே 47 ஆக இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை தற்போது 42 ஆக குறைந்துள்ளது. மேலும், கரூர் எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக ஏற்கனவே 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்திருந்த நிலையில், சி.விஜயபாஸ்கரின் இந்த ராஜினாமா முக்கியத்துவம் பெறுகிறது. இவர் ஓரிரு நாட்களில் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வதன் பின்னணியில் குதிரை பேரம் நடப்பதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இது ஆரோக்கியமான அரசியல் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version