அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு ரூ.2200 கோடி வழங்கிய எலக்ட்ரிக்கல் நிறுவனம்

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கடந்த 43 ஆண்டுகளாக தொலைபேசி மற்றும் மின்சாதன பொருட்கள் தயாரிக்கும் பணியில், புகழ்பெற்ற ஃபைபர் பாண்ட் எலக்ட்ரிக்கல் நிறுவனம் இயங்கிவந்துள்ளது.

கடந்த 1982ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை கிரஹாம் வாக்கர் என்பவர் தொடங்கி, அதன் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த நிறுவனத்தை, மின் மேலாண்மை நிறுவனமான ஈட்டன் நிறுவனத்திற்கு 16,000 கோடி ரூபாய்க்கு பைஃப்பர் பாண்ட் எலக்ட்ரிக்கல் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இதனையடுத்து நிறுவனத்தில் நீண்ட வருடங்களாக பணிபுரிந்து வந்த 65 வயதுக்கு மேற்பட்ட 540 ஊழியர்களுக்கு சுமார் 2200 கோடி ரூபாயை, நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை அதிகாரி வாக்கர் கூறுகையில், கடினமான காலங்களில் நிறுவனத்துடன் கைகோர்த்து வழிநடத்தி, நம்பிக்கைக்குரிய நபர்களாக இருந்த ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version