தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆணையர் ஜெயசீலன் ஐஏஎஸ், இனி தொல்லியல் துறை இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவின்படி, தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் இயக்குநர் பொறுப்பில் இருக்கும் ஜெயசீலன், இனி தொல்லியல் துறையின் இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக வகிப்பார். இதற்கு முன்னர், தமிழ்நாடு தொல்லியல் துறையின் இயக்குநர் பொறுப்பை உதயச்சந்திரன் ஐஏஎஸ் கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது இந்தப் பதவி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநர் ஜெயசீலனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்தியவர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் ஆவார். அவரது இந்த முக்கியப் பதவியை தற்போது அவரிடமிருந்து பறித்துள்ளது தமிழக அரசு. திமுக ஆட்சியில் உதயச்சந்திரன் ஐஏஎஸ் மிகவும் சக்திவாய்ந்த அதிகாரியாக வலம் வந்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக அவர் பணியாற்றியுள்ளார். பின்னர், நிதித்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். திமுக ஆட்சியில் முக்கியப் பதவிகளில் உதயச்சந்திரனின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நட்பு வளையத்தில் இருந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், திறமையான பல அதிகாரிகள் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
You Might Also Like
பயிற்சித் துறையில் புதிய தொழில்நுட்பங்கள்: அமைச்சர் சரத்குமார் ஆய்வு
செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் பயிற்சிகளை மேம்படுத்த அமைச்சர் சரத்குமார் அறிவுறுத்தல். பயிற்சித் துறையின் பணிகள் குறித்து விரிவான ஆய்வு.
1 Min Read
பாஜக மகளிரணி நிர்வாகி தவெகவில் இணைவு: அரசியல் களம் சூடு
பாஜக மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி அரவிந்த், அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார். இந்த திடீர் கட்சித்தாவல் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 Min Read
முதல்-அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ – அரசாணை வெளியீடு
தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்துபோட்டார். 2-வது கையெழுத்து *பெண்களிடையே நம்பிக்கை
2 Min Read
ஜோசப் விஜய் அரசு: தகுதித் தேர்வு குளறுபடி குறித்து வானதி சீனிவாசன் கேள்வி!
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வில் மதிப்பெண் குளறுபடிகள் நடந்துள்ளதாக பாஜக தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.…
1 Min Read

