காய்ச்சல் முதல் தோல் நோய் வரை: துளசியின் அற்புத மருத்துவ குணங்கள்!

பல மருத்துவ குணங்கள் கொண்ட துளசி செடி.

பல வீடுகளில் நம் முன்னோர்கள் துளசி செடியை வளர்த்து வந்தனர். "மூலிகைகளின் அரசி" என்று அழைக்கப்படும் துளசி, தமிழ் மருத்துவத்தில் எண்ணற்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. இந்த துளசியை எவ்வாறு உட்கொண்டால் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தலாம் என்பது குறித்து விரிவாகக் காண்போம்.

பொதுவாக, துளசி சளிக்கு மிகவும் நல்லது. அனைத்து வகையான காய்ச்சல்களையும் துளசி கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. தினமும் துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், சிறுகுடல், பெருங்குடல் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும். இந்த ஆற்றல் துளசிக்கு உண்டு.

மேலும், ஆரோக்கியம் மிகுந்த துளசி இலையை எலுமிச்சை சாறுடன் சேர்த்துப் பசை போல் அரைத்து, தோல் நோய்களுக்குப் பற்றாகப் போட்டால் அந்த நோய்கள் குணமாகும். துளசி இலை அரைத்த விழுதை வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து, தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் தேமல் மறைந்து ஆரோக்கியம் பிறக்கும்.

துளசி செடி இருக்கும் இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும், கொசுக்களும், தீய சக்திகளும் அண்டாது என்பது ஒரு நம்பிக்கையாகும். துளசியை செம்பு பாத்திரத்தில் போட்டு 8 மணி நேரம் ஊறவைத்து, காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

துளசி இலைகளைக் கழுவி மென்றும் சாப்பிடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வாய்நாற்றம் போன்ற பிரச்சினைகள் நீங்கும். மேலும், காற்றிலுள்ள புகையைச் சுத்திகரிக்கும் தன்மையும் இந்த துளசிக்கு உண்டு.

மற்ற தாவரங்களை விட அதிகளவில் கார்பன்டை ஆக்சைடு வாயுவை கிரகித்து, ஆக்சிஜனை வெளியிடும் சக்தி துளசிக்கு உண்டு. இதன் மூலம் சுற்றுச்சூழலையும் துளசி தூய்மைப்படுத்துகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த துளசியை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி ஆரோக்கியத்தைப் பேணலாம்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version