மீண்டும் ஆளுநரைச் சந்திக்க புறப்பட்டார் விஜய்

தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைக் கைப்பற்றினாலும் கூட, பெரும்பான்மை இல்லாததால் இதுவரை ஆட்சியமைக்க இயலாமல் தவித்து வருகிறது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கட்சிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தன. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தவெகவுக்கு விசிகவும் இன்று ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் அக்கட்சி பெரும்பான்மையை எட்டியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு அளித்ததால், தவெகவின் ஆதரவு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

ஆளுநரைச் சந்திக்க அனுமதி கோரி விஜய் கிண்டி லோக்பவன் புறப்பட்டார். ஆனால் நடுவழியில் திடீரென அவரது வாகனம் யூ டேர்ன் போட்டு மீண்டும் பட்டினப்பாக்கத்திற்கே திரும்பிச் சென்றது.

விஜய்யை சந்திக்க தமிழக கவர்னர் அனுமதி மறுத்துவிட்டதாக சிபிஎம் தலைவர் சண்முகமும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஆளுநரின் கேரளா பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து ஆளுநரைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், ஆளுநரைச் சந்திக்க விஜய் மீண்டும் கிண்டி லோக்பவன் புறப்பட்டார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version