100 நாட்களில் தவெகவுக்கு கெட்ட பெயர் இல்லை: திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்

தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக (தமிழ்நாடு வெற்றி கழகம்) அரசு, தனது முதல் 100 நாட்களில் பெரிய அளவில் எந்த கெட்ட பெயரையும் எடுக்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆட்சி நிர்வாகத்திற்கு தவெகவினர் புதியவர்கள். இந்த 100 நாட்களில் அவர்கள் பெரிய அளவில் எந்த கெட்ட பெயரையும் சம்பாதிக்கவில்லை. விவாதிக்கத் தெரியவில்லை, பதில் சொல்லத் தெரியவில்லை என்பது ஜனநாயகத்தில் ஒரு குறைபாடு இல்லை. லஞ்சம் குறைந்திருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு முதல் 100 நாட்களை வெற்றிகரமாக நகர்த்தி இருக்கிறார்கள். இது பாராட்டுக்குரியது" என்று குறிப்பிட்டார்.

மேலும், தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி எம்பிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிலிருந்து தவெக அரசு மாறாது என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக தமிழக முதல்வரிடம் வலியுறுத்தப்படும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது தொடர்பாக அரசின் முடிவை விசிக வரவேற்பதாகவும், இது நியாயமான முடிவு என்றும் அவர் கூறினார். விருப்பமில்லாதவர்கள் வாங்க மறுத்தால் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணியின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் விஜய் கார் வழங்க முன்வந்திருப்பதை விசிக வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், கரூர் சம்பவம் போல் ஒரு சம்பவம் மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே தான் அப்படி நடந்துகொண்டதாக அவர் விளக்கமளித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் நடந்த கூட்ட நெரிசலுக்கு தொண்டர்கள் காரணம் அல்ல, நிர்வாகமே காரணம் என்றும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version