திமுக, அதிமுக மாறி மாறி ஆள வேண்டும்: தமிமுன் அன்சாரி

கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார். பிற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ராஜினாமா செய்ய வைத்து, தங்கள் பக்கம் இழுப்பது தூய அரசியல் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

டெல்லியில் உள்ள சில கட்சிகள், அதிமுகவை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி அழிக்க வேண்டும் என்ற நீண்ட கால திட்டத்துடன் செயல்படுவதாகவும், அந்த திட்டங்களை தற்போது படிப்படியாக நிறைவேற்றி வருவதாகவும் தமிமுன் அன்சாரி குற்றம் சாட்டினார். அதேபோல், திமுகவையும் தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடப்பதாகவும் அவர் கூறினார்.

திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இரண்டையும் ஒழிப்பதே அவர்களின் முக்கிய நோக்கம் என்றும், இன்றைய சூழலில் திமுகவை காப்பாற்றுவது தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகளின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும்தான் மாறி மாறி ஆட்சி செய்ய வேண்டும் என்பதே மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் விருப்பம் மற்றும் நிலைப்பாடு என்றும், திமுகவை தனிமைப்படுத்தவும், அதிமுகவை பிளவுபடுத்தவும் நடக்கும் முயற்சிகளை தமிழக மக்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version