ஹைதராபாத் நட்சத்திர ஹோட்டல்களில் கள் விற்பனை – தெலுங்கானா அரசு திட்டம்!

தெலுங்கானா மாநிலத்தின் கலாச்சாரத்தை உலகறியச் செய்யும் நோக்கில், அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி நட்சத்திர ஓட்டல்களிலும் 'கள்' மற்றும் 'நீரா' (பதநீர்) விற்பனை ஊக்குவிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் பி.சி.நலச்சங்கத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் தெரிவித்துள்ளார். இதற்கான தீவிர முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

மேலும், தோட்டக்கலை பண்ணைகளில் ஈச்சம் மற்றும் பனை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஹைதராபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கூட கள், நீரா போன்ற பாரம்பரிய பானங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இது தெலுங்கானா மாநிலத்தின் தனித்துவமான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகும்.

கள் இறக்கும் தொழிலாளர்களின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தும் என்றும் அமைச்சர் பொன்னம் பிரபாகர் உறுதியளித்துள்ளார். மேலும், எக்ஸ்பீரியம் பார்க்கில் 'பனைமேளா' நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 250 வகையான பனை மரங்கள் நடப்பட்டு, பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் மூலம், தெலுங்கானா மாநிலத்தின் பாரம்பரிய பானங்களை புத்துயிர் பெறச் செய்து, உள்ளூர் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கமாகும். பனை மரங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தவும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version