அமெரிக்கா மீண்டும் தாக்கினால் யுரேனிய செறிவூட்டலை 90% ஆக உயர்த்துவோம் – ஈரான் கடும் எச்சரிக்கை

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனினும், இந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக, அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துமா என்ற சந்தேகம் நீடிக்கிறது.

இத்தகைய சூழலில், அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதம் தயாரிக்கும் திறன்கொண்ட யுரேனிய செறிவூட்டலை தற்போதுள்ள 60 சதவீதத்திலிருந்து முழுத் திறன் கொண்ட 90 சதவீதமாக உயர்த்துவோம் என்று ஈரான் அமெரிக்காவை எச்சரித்துள்ளது. 'மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால், 90 சதவீத செறிவூட்டல் என்பது ஈரானின் விருப்பமான தேர்வுகளில் ஒன்றாக இருக்கும். இது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும்' என்று ஈரானின் பாராளுமன்ற கமிஷன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version