நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 33வது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழகம் அறிவித்தபடி முதலில் 'வந்தே மாதரம்' பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும், இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பெயரிலேயே மனோன்மணியம் சுந்தரனார் பிள்ளையின் பெயர் இருக்கும் நிலையில், அவரது பெயரைக் கொண்ட பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து இறுதியாகப் பாடப்பட்டது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்துள்ளன. இது தொடர்பாக தவெக ஐ.டி விங்க் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்ற முழக்கத்தை முன்வைத்து, 'எங்கள் தமிழ் மண்ணில் தமிழை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருநாளும் ஏற்க மாட்டோம். மாநிலப் பாடலுக்கு மரியாதை தரப்படும் என்று அறிவித்துவிட்டு, இப்போது அப்படியே மடைமாற்றி, தமிழகத்தின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவது கடுமையான கண்டனத்திற்கு உரியது. நம்முடைய எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காகத்தான், தமிழக அரசின் சார்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தோம். தமிழக மக்களின் உணர்வைப் புரிந்துகொள்ளாத ஆளுநர் அவர்களைக் கண்டிக்கிறோம். ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கு, மாநில உரிமையைப் பறிக்கும் செயல். இதைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதை கண்டனத்துடன் ஆழமாகப் பதிவு செய்கிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், 'இன்று மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார் தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு விசுவநாதன். இவரோடு சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களும் பல மாணவர்களும் புறக்கணித்திருப்பது வரவேற்புக்குரியது. ஆளுனரின் தமிழர் விரோதப்போக்கு ஏற்புடையதல்ல. அவரவர் தாய்மொழிக்கு முன்னுரிமை தராமல், வந்தேமாதரம் மூலம் போலி தேசபக்தியை கட்டமைக்க முனைவது அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிரானதாகும். இதைத்தான், நேரு காலத்திலிருந்து இப்போதுவரை ஆர்எஸ்எஸ் கும்பல் செய்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியும் வந்து சேரவில்லை. தமிழ்மொழிக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மறுத்து சமற்கிருதத்துக்கு ஒதுக்கும் வஞ்சனை. காவிரியிலிருந்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நீரையும் திறந்து விடுவதில்லை. எல்லாவற்றிலும் ஒன்றிய பாஜக அரசு கள்ள மவுனமே காக்கிறது. இந்த சூழலில், வந்தே மாதரம் மட்டும் திணிப்பது சரியா? தமிழ்நாட்டின் உணர்வுகளை புறக்கணிக்கும் ஆளுனர் மாளிகையின் தமிழர் விரோதப்போக்கு கண்டனத்துக்குரியதாகும்' எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள பதிவில், 'மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் – அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மூன்றாம் இடம் அளிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக அறிவிப்பின்படி முதலில் 'வந்தே மாதரம்' பாடப்பட்டு, அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இந்த நிகழ்வு, தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பெயரிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவரின் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், அவரது பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து இறுதியாகப் பாடப்பட்டது கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.
தவெக ஐ.டி விங்க், இந்த செயலைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. மாநிலப் பாடலுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும், தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவது ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஆளுநரின் இந்த செயல் தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு விசுவநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் இந்தப் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்ததை அமைச்சர் வன்னி அரசு வரவேற்றுள்ளார். ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கையும், தாய்மொழிக்கு முன்னுரிமை தராமல் வந்தே மாதரம் மூலம் போலி தேசபக்தியை கட்டமைக்க முயல்வதையும் அவர் கண்டித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதி மற்றும் காவிரி நீர் போன்ற விஷயங்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் அலட்சியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். இனிவரும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை உறுதிசெய்யும் வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

