ஹார்முஸ் ஜலசந்தியில் தமிழக மாலுமி உயிரிழப்பு: சக மாலுமிகள் கண்ணீர் வீடியோ

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா-ஈரான் தாக்குதல் காரணமாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலக நாடுகளின் பல்வேறு கப்பல்கள் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியாவைச் சேர்ந்த 13 கப்பல்கள் இந்திய மாலுமிகளுடன் 107 நாட்களாக சிக்கித் தவிக்கின்றன.

இந்த கப்பல்களில் மொத்தம் 562 இந்திய மாலுமிகள் உள்ளனர். இவர்களில், எம்.டி. செலிஷ்டியல் என்ற கப்பலில் தமிழகத்தைச் சேர்ந்த நிஷாந்த் நாதன் (35) என்பவர் இரண்டாம் நிலை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், ஜூன் 11ஆம் தேதி உரிய சிகிச்சை கிடைக்காமல் கப்பலிலேயே உயிரிழந்தார்.

இந்த துயரச் செய்தியை, சக மாலுமிகள் வெளியிட்ட ஒரு கண்ணீர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர். ஓமனில் உள்ள இந்திய தூதரகமும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்த நிஷாந்த் நாதனின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான உரிய நடவடிக்கைகளைத் தூதரகம் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version