தமிழ்நாட்டில் மதுபான விலை உயர்வு: விரைவில் அமலாகிறது புதிய சட்டம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன் கருதி மதுபான விற்பனை மீது புதிய தீர்வை விதிக்கும் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் ஒரு முக்கிய மசோதாவை அறிமுகப்படுத்தினார். தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்திருத்த மசோதா என்ற இந்த மசோதா, மதுபான நுகர்வினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு முன்மொழியப்பட்டுள்ளது.

மதுபானங்களின் பயன்பாடு மற்றும் அதன் கொள்கலன்களான கண்ணாடி, பிளாஸ்டிக் கழிவுகளால் மோசமான சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்புகள் ஏற்படுவதாக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மதுபானக் கொள்கலன்களை முறையாக அப்புறப்படுத்தாததும், மறுசுழற்சி செய்யாததும் வனவிலங்குகள், பொது சுகாதாரம் மற்றும் சூழலியல் சீரழிவிற்கு முக்கிய காரணமாக அமைகின்றன.

இந்தச் சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்புகளைக் குறைக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான நடைமுறைகளை ஊக்குவிக்கவும், ஒரு ஒழுங்குமுறை நடவடிக்கை அவசியம் என அரசு கருதுகிறது. இதன் அடிப்படையில், மதுபான விற்பனையின் மீது சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை விதிப்பதற்கு அரசு முன்மொழிந்துள்ளது.

இந்தத் தீர்வின் மூலம் கிடைக்கும் நிதி வருவாய், குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய மசோதா, எந்தக் கட்சி உறுப்பினர்களின் விவாதமும் இன்றி, நேற்று (ஆகஸ்ட் 10) சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன், அது சட்டமாக நடைமுறைக்கு வரும். இந்த மசோதா சட்டமாக அமலுக்கு வந்தால், மதுபான விற்பனையின் மீது கூடுதல் தீர்வை விதிக்கப்படுவதன் காரணமாக, தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மதுபிரியர்களுக்கு ஒரு அடுத்த ஷாக் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version