தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகள் 7 ஆக உயர்வு

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது 7 ஆக உயர்ந்துள்ளது. கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தலைமை செயலகத்திற்கு வருகை தந்தார். அங்கு சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து, தனது பதவியை ராஜினாமா செய்வதாக எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்தார். இந்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்ததை தொடர்ந்து, கரூர் தொகுதி காலியானதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், தமிழகத்தில் மொத்தம் 7 சட்டசபை தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன. ஏற்கனவே காலியாக உள்ள தொகுதிகள்: திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், மற்றும் விராலிமலை. இந்த 7 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version