தமிழக ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை

தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன தகுதிச் சான்றிதழ் பெறுவதற்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த அலுவலகங்களுக்கு வருகின்றனர். இந்த நிலையில், மாநிலம் முழுவதும் 45 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒருங்கிணைந்த முறையில் போலீசார் இந்த சோதனைகளை மேற்கொண்டனர்.

கோவை, திருப்பூர், தென்காசி, நாகர்கோவில், திருநெல்வேலி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கரூர், கும்பகோணம், திருச்சி, சேலம், ஸ்ரீவில்லிபுத்தூர், காரைக்குடி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் போது, ஏராளமான அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கணக்கில் வராத பணத்துடன் பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகத்தில் டி.எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். அங்கு கணக்கில் வராத 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த திடீர் சோதனைகள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோதனைகள் மூலம், அரசு அலுவலகங்களில் நிலவும் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இது போன்ற தொடர் நடவடிக்கைகள் மூலம், பொதுமக்களுக்கு வெளிப்படையான மற்றும் நேர்மையான சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை முனைப்பு காட்டி வருகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version