ஸ்டாலின் கேள்வி: முதலமைச்சர் எப்போது Silent Mode-ல் இருந்து வெளியே வருவார்?

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், முதலமைச்சர் குறித்து தனது எக்ஸ் தளத்தில் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். 'திறமையான அதிகாரிகளை நியமித்துவிட்டேன்', 'சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்' என்று முதலமைச்சர் கூறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதலமைச்சரின் காதுகளுக்கு, பிஞ்சுக் குழந்தைகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு முதலமைச்சர் எப்போது 'கால்ஷீட்' கொடுப்பார்? குற்றவாளிகள் அச்சமின்றி குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும் அவர் வினவியுள்ளார்.

சவால்களையும், சவடால்களையும் விட்ட முதலமைச்சர், எப்போது 'silent mode'-ல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், தான் ஆறு மாதங்களுக்கு எதுவும் கேட்கக் கூடாது என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறாரா? என்றும் ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version