1 லட்சம் கோடி நஷ்ட ஈடு: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் வழக்கறிஞர் நோட்டீஸ்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுக்கு பதிலடியாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் வழக்கறிஞர் சூரிய பிரகாசம், ஸ்டாலினுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ என்பவர் அமைச்சர் ஆதவின் நெருங்கிய உறவினர் என ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர் ஆதவின் வழக்கறிஞர், இது கற்பனையான குற்றச்சாட்டு என்றும், வேண்டுமென்றே அவதூறு பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜான் பிரிட்டோவுடன் அமைச்சர் ஆதவிற்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், இதுகுறித்து ஜான் பிரிட்டோ சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் செயல்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சூரிய பிரகாசம், 'அமைச்சர் குறித்து தவறாக கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், அதே சமூக வலைதளத்தில் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் 1 கோடி இழப்பீடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடரப்படும்' என்று தெரிவித்தார்.

அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்ற வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version