தென்மாநிலங்களுக்கான மண்டல கவுன்சிலில் தமிழகத்தின் பிரதிநிதிகளாக, சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு அதிரடியாக அரசாணை வெளியிட்டுள்ளது.
நாட்டில் மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ், ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் தனித்தனி கவுன்சில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கவுன்சில்கள் மத்திய உள்துறை அமைச்சரின் தலைமையில் செயல்படுகின்றன. தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தென்மாநில மண்டல கவுன்சிலின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளார்.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டு முதல், அப்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். மேலும், அமைச்சர்களாக இருந்த டி.ஆர்.பி. ராஜா மற்றும் சேகர்பாபு ஆகியோர் உறுப்பினர்களாக செயல்பட்டு வந்தனர்.
தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த கவுன்சிலில் தமிழகத்தின் புதிய பிரதிநிதிகளாக சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இந்த மண்டல கவுன்சிலின் முதலாவது ஆலோசகராகவும், உள்துறை செயலாளர் மணிவாசன் இரண்டாவது ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் குறித்த முழு விவரங்கள் தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை தென்மாநிலங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

