டெல்லியில் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடக்கம்

கல்வி சீர்திருத்தம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் சுற்றுச் சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். நாடு தழுவிய ஆதரவை அவர் உருக்கமாகக் கோரியுள்ளார். அவரது உண்ணாவிரதம் திங்கட்கிழமை, ஜூலை 29 அன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜபி) நிறுவனரான அபிஜீத் டிப்கே, சோனம் வாங்சுக் ஆதரவு கோரும் காணொளியைப் பகிர்ந்துள்ளார். பொதுமக்கள் டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்கலாம் அல்லது தங்கள் மாநிலங்கள், நகரங்கள், கிராமங்களில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தலாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘அனைவருக்கும் நமஸ்காரம். கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும், சிஜபி மற்றும் லடாக் மக்களின் உரிமைக்காகவும், உப்பும் தண்ணீரும் மட்டுமே அருந்தி நான் மேற்கொண்டுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளை எட்டியுள்ளது. இங்கு ஏற்கெனவே ஏராளமான மக்கள் என்னோடு கைகோத்துள்ளனர். நீங்களும் இதில் இணையலாம். டெல்லிக்கு வந்து நீங்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தால் அது எங்களுக்குப் பெரும் பலமாக இருக்கும்,’ என்று சோனம் வாங்சுக் காணொளியில் பேசியுள்ளார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. சோனம் வாங்சுக் கோரிக்கைக்கு நாடு முழுவதும் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version