ஷங்கரின் அடுத்த படம் ‘வேள்பாரி’ அல்ல, அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர்!

பிரபல இயக்குநர் ஷங்கர், சு. வெங்கடேசன் எழுதிய 'வேள்பாரி' நாவலைத் திரைப்படமாக இயக்க உள்ளார். இந்த நாவலின் உரிமையை அவர் பெற்றுள்ள நிலையில், படத்தை மூன்று பாகங்களாக எடுக்க உள்ளதாக முன்னர் தெரிவித்திருந்தார். இது தனது கனவுப் படம் என்றும் அவர் கூறியுள்ளார்.

'வேள்பாரி' படத்தின் முன் தயாரிப்பு பணிகளுக்கு சுமார் ஒரு வருடம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகளை ஷங்கரும் அவரது குழுவினரும் ஏற்கனவே தொடங்கியுள்ளனர். இருப்பினும், அதற்கு முன்பாக ஒரு இளம் ஹீரோவை வைத்து ஒரு படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

புதியதாக அவர் இயக்கவுள்ள படம், ஷங்கரின் வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக இரண்டு இளம் ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை விரைவாக முடிக்கும் நோக்கில் ஷங்கர் செயல்பட்டு வருவதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version