தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன், தனது அடுத்த படமாக ‘சேயோன்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.
‘விருமாண்டி’ படத்தைப் போலவே கருமாத்தூர் தெய்வங்களை அடிப்படையாகக் கொண்டு, மதுரையில் நடக்கும் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த கிராமப்புற குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘சேயோன்’ உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் வாரம் தொடங்குகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இத்திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடிக்கிறார். மேலும் பால சரவணன், அருள்தாஸ் போன்றோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘சேயோன்’ திரைப்படம் அக்டோபர் மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

