முன்ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி ஐகோர்ட்டில் மனு: ‘எனக்கும் தொடர்பில்லை’

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவரும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது எங்கு இருக்கிறார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், ஆட்சிக்கவிழ்ப்பு சதி தொடர்பாக முன்ஜாமின் கோரி அவர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். கடந்த 27-ம் தேதிக்குப் பிறகு கட்சி கூட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை என்றும், அவரது செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 7 நாட்களாக தலைமறைவாக உள்ள செந்தில்பாலாஜி, திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கும் சில நாட்களாக வரவில்லை.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து, ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குதிரை பேரத்துக்கு தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் செந்தில்பாலாஜி குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version