செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், பண மோசடி வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 27) ஆஜராகி முன் ஜாமீன் பெற்றார். நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்கு இந்த முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க 35 கோடி ரூபாய் லஞ்சம் பேரம் பேசியதாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து, இருவரும் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கடந்த ஜூலை 8ஆம் தேதி இந்த மனுக்களை விசாரித்து, இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, 15 நாட்களுக்குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமின் பெற வேண்டும் என்றும், மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன் தினமும் இருவேளையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

மேலும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 25 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கான இரு நபர் ஜாமீன் செலுத்தவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி, ஜூலை 24ஆம் தேதி செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமின் பெற்றார். அதன் பின்னர் காவல்துறையினரிடம் தொடர்ந்து ஆஜராகி வருகிறார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்று மாலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் ஆஜரானார். பிணைத்தொகை மற்றும் உத்தரவாதத்தை செலுத்திய பிறகு, அவருக்கும் முன் ஜாமின் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, காவல்துறையினர் முன் தினமும் இருவேளையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு முன் ஜாமின் கிடைத்துள்ளது. இது குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version