சபாநாயகர் முடிவுக்கு சசிகலா எதிர்ப்பு: தவறான முன்னுதாரணம் என கருத்து

சட்டமன்ற வரலாற்றில் தவறான ஒரு முன்னுதாரணமாக அமைந்து விடக்கூடாது என சபாநாயகரின் முடிவுக்கு சசிகலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தற்போது சம்பந்தப்பட்ட 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது நடைமுறைக்கு உகந்ததாக தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சசிகலா மேலும் கூறுகையில், 'சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, அதன் சட்டரீதியான அம்சங்களையும், அது சட்டமன்ற வரலாற்றில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் சபாநாயகர் கருத்தில் கொள்ள வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

சபாநாயகரின் இந்த முடிவு, எதிர்காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதிக்கக்கூடும் என்றும், இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடும் என்றும் சசிகலா தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version