பிரச்சினைகளை வெளிப்படையாக எழுப்புங்கள்: ராகுல் காந்தி அறிவுரை

தாங்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சனைகளை முஸ்லிம்கள் தயக்கமின்றி வெளிப்படையாகப் பேச வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், எந்தவொரு முஸ்லிமும் அநீதிக்கு உள்ளானால், அதை எதிர்த்து குரல் கொடுப்பது அவசியம் என்று தெரிவித்தார்.

மேலும், ஒரு சிறுபான்மைக் குழுவின் உறுப்பினராக மட்டுமல்லாமல், 'முஸ்லிம்' என்ற தனி அடையாளத்துடனும் ஒருவர் தனது குரலை எழுப்ப வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார். இதேபோல், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொதுப் பிரிவினர் குறித்தும் அவர் கூட்டத்தில் பேசினார். தங்கள் மீது தாக்குதல்கள் நடந்தால், அந்தக் குறிப்பிட்ட சமூகத்தைத் தெளிவாக அடையாளம் காட்டி அந்தப் பிரச்சினை எழுப்பப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சமீப காலமாக பொதுமக்கள் மத்தியில், 'முஸ்லிம்' என்று வெளிப்படையாகக் கூறுவதற்குப் பதிலாக 'சிறுபான்மையினர்' என்ற சொல் பயன்படுத்தப்படுவதாகவும், சிறுபான்மையினரை 'முஸ்லிம்' எனக் குறிப்பிட்டு அழைக்க கட்சியினர் தயங்கக்கூடாது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். இது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்களைத் தெரிவித்தன.

கடந்த 2014-ல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில், இதை அரசியலாக்கும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தக் கூட்டத்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version