த.வெ.க அரசு சிறப்பாக செயல்படுகிறது – ராகவா லாரன்ஸ்

த.வெ.க அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், பொறாமையின் காரணமாகவே எதிர்கட்சிகள் குறை கூறி வருவதாகவும் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலுக்கு வருவது தொடர்பாக நல்ல முடிவை எடுத்துள்ளதாகவும், விரைவில் தனது தாய் முன்னிலையில் ரசிகர்களுடன் மேடையில் வைத்து இதனை அறிவிக்க இருப்பதாகவும் கூறினார். மக்கள் தன்னை அரசியலுக்கு அழைப்பதாகவும், களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரஜினியின் ஆசிர்வாதத்துடன் பேசுவதாகவும், அரசியலுக்கு வருவது குறித்து தனது தாயிடம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். த.வெ.க அரசின் ஒரு மாத ஆட்சி சிறப்பாக இருப்பதாகவும், அமைச்சர்கள் நன்றாக செயல்படுவதாகவும் அவர் பாராட்டினார். மக்கள் மாற்றத்தை விரும்பி வாய்ப்பு கொடுத்திருப்பதால், அரசுக்கு சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

எதிர்கட்சிகள் பொறாமையின் காரணமாகவே த.வெ.க அரசு மீது குறை கூறி வருவதாகவும், த.வெ.க தொண்டர்கள் தற்குறிகள் அல்ல, கூர்மையான அம்புக்குறிகள் என்றும் அவர் கூறினார். கல்வி நிலையங்கள் மற்றும் கோவில்களுக்கு அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும், வளர்ச்சியை பிடிக்காததாலேயே த.வெ.க மீது விமர்சனங்கள் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version