புழலில் நடுரோட்டில் ரகளை: பெண்களை கண்டித்த நெட்டிசன்கள்

புழல் அருகே நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட பெண்கள்

திருவள்ளூர் புழல் அருகே, காவாங்கரை சிக்னலில் இன்று மாலை நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளம் பெண்கள், சாலையில் ஒரு விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இத்துடன் நிற்காமல், போக்குவரத்தை தடுத்து நிறுத்தி, தட்டிக் கேட்ட பொதுமக்களிடமும், போக்குவரத்து காவல்துறையினரிடமும் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவலரை பார்த்து, 'நீ என்ன போலீசா?' என்று கேட்டு அவர்களை அவமதித்துள்ளனர். இந்த பெண்களின் செயலால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நடுச்சாலையில் அவர்கள் நடத்திய இந்த போராட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் 'மாற்றம்' என்ற பெயரில் மிகவும் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் மீதும் காவல்துறை உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கவை என்றும் பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version