அமைச்சர்களின் செயல்பாடு கண்டனத்திற்குரியது – பிரேமலதா விஜயகாந்த்

டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டது குறித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அமைச்சருக்கு நிகரான அரசு பதவிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விருத்தாசலத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரு ஐபிஎல் நடக்கும் மைதானத்தில் அமைச்சர் சரத்குமார் அப்படி செயல்பட்டிருந்தால் அது மிகவும் கண்டனத்திற்குரியது" எனத் தெரிவித்தார்.

மேலும், முதல்வர் பிறந்தநாளில் அரசுப் பள்ளிகளில் புகைப்படங்கள் மாட்டுவது, ரீல்ஸ் எடுப்பது, சினிமா பாடல்களுக்கு நடனமாடுவது போன்ற செயல்கள் கண்டனத்திற்குரியவை என்றும், அமைச்சர் அவர்களே நடனமாடுவதும் ஏற்புடையதல்ல என்றும் பிரேமலதா கூறினார். "எதுக்கெடுத்தாலும் ஒரு 4 மாதங்களுக்கு எதுவும் கேட்காதீர்கள்" என்று கூறுவதாகவும், ஆனால் ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடந்துகொண்ட விதம் சிறிதும் ஏற்புடையதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சினிமா பாடல்களுக்கு பள்ளிகளில் நடனமாடுவது மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்றும், எனவே அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார். அமைச்சருக்கு இணையான அரசுப் பதவிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரையே நியமிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version