பெட்ரோல், டீசல் விலை விரைவில் ரூ.5 வரை உயர்கிறதா? வெளியான அதிர்ச்சி தகவல்

மேற்கு ஆசியா முழுவதும் போர் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியளவு சீர்குலைந்துள்ளதாலும், சமீபத்திய பத்தாண்டுகளில் இல்லாத மிக மோசமான எரிசக்தி நெருக்கடிகளில் ஒன்றை உலகம் எதிர்கொண்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 70 டாலரிலிருந்து கிட்டத்தட்ட 126 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் உலக நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.

அரசாங்கங்கள் அவசரகாலக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன, மேலும் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரலாறு காணாத விலையை செலுத்தி வருகின்றனர். இருப்பினும், இந்த உலகளாவிய குழப்பங்களுக்கு மத்தியிலும், இந்தியா எரிபொருள் விலைகளை பெரும்பாலும் நிலையாக உள்ளது. 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. எனினும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் வணிக சிலிண்டர் விலை .₹928.50 உயர்ந்தது.

இந்த நிலையில் பெட்ரோல் , டீசல் விலை மே 15 ஆம் தேதிக்குள் அதிரடியாக விலை உயரலாம் என்று சொல்லப்படுகிறது. பெட்ரோல் ரூ.4ம், டீசல் ரூ.5 வரையும் உயரக்கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன. எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு தோராயமாக ரூ30 ஆயிரம் வரை இழபை சந்தித்து வரும் நிலையில் இதனை ஈடுகட்டும் விதமாக விலை உயர்வு இருக்கலாம் என்று எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version