பாகிஸ்தான்: சோதனைச் சாவடியில் குண்டுவெடிப்பு – 15 காவல்துறையினர் பலி

பாக்கிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து, ஒரு போலீஸ் சோதனைச் சாவடி அருகே மோதி பயங்கரவாதிகள் வெடிக்க செய்துள்ளனர். இந்தத் தாக்குதலில் போலீஸ் சோதனைச் சாவடி முற்றிலும் தரைமட்டமானது.

முதற்கட்ட தகவலின்படி குறைந்தது மூன்று பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும் தாக்குதல் நடந்த சமயத்தில் சோதனைச் சாவடியில் 15 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மீட்புப் பணிகளுக்காக வந்த போலீஸ் குழுக்களின் மீதும் பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

காவல்துறை அதிகாரி சஜ்ஜத் கான் கூறுகையில், அந்தப் பகுதியில் இன்னும் மோதல்கள் நீடித்து வருவதால், உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கையை இப்போதே உறுதிப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version