புதிய அரசின் திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றுகிறார்.

புதிய அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில், தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக பட்ஜெட் ஏமாற்றத்தை அளிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் விமர்சித்துள்ளார். 'புதிய அரசின் திட்டங்களை பட்ஜெட்டில் தேடிப் பார்த்தேன், ஆனால் கிடைக்கவில்லை. ஆளும் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை' என அவர் குற்றம் சாட்டினார்.

சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், முதலில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், தவெக அரசு செயல்படும் விதம் மிகவும் வித்தியாசமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை அரசு மறந்துவிட்டதாகத் தோன்றுகிறது என்றும், அதனால்தான் தனது முதல் கட்ட அறிக்கையையும், வேளாண் அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பட்ஜெட், பெயர்களை மாற்றும் பட்டியல் போல வெளியாகி இருப்பதாக அவர் விமர்சித்தார்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, முதலமைச்சர் துறைவாரியாக ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், தேர்தல் வாக்குறுதிகள் செயல்திட்டங்களாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தின் வடிவமாகவே இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

புதிய அரசு அமைந்திருப்பதால், புதிய திட்டங்கள் வரும் என நம்பிய மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆளும் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி உரிமைத் தொகையை இன்னும் வழங்கவில்லை. மேலும், ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று நம்பியிருந்த பெண்களுக்கு அது குறித்த அறிவிப்பு கூட வரவில்லை. இதனால், மக்கள் ஏமாற்றத்துடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

'பெயர் மாற்ற பட்டியல் போல் பட்ஜெட் அமைந்துள்ளது. வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துவிட்டு தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. பட்ஜெட் ஏமாற்றத்தின் வடிவமாக உள்ளது. திரும்பும் பக்கமெல்லாம் திராவிட மாடல் அரசின் திட்டங்களே தென்படுகின்றன. மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களே தொடர்கின்றன' என சட்டப்பேரவையில் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.

தமிழக பட்ஜெட்டில் திரும்பும் பக்கமெல்லாம் திமுக ஆட்சியின் திட்டங்களே இடம்பெற்றுள்ளன. புதிய அரசின் திட்டங்களை பட்ஜெட்டில் தேடினேன், தேடினேன், தேடிக் கொண்டே இருக்கிறேன். ஆனால், ஆளும் அரசு தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை பட்ஜெட்டில் நிறைவேற்றவில்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், எதிர்கட்சிகள் சொல்வதுபோல் மூன்றே மாதங்களில் திட்டங்களை நிறைவேற்றுவதில் சரித்திரம் படைக்க முடியாது என்றும், எதிர்கட்சிகள் அப்படி ஏதேனும் சரித்திரம் படைத்திருந்தால் அதைச் சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். திட்டங்களை செயல்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய அரசின் பட்ஜெட், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றும், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் ஓ. பன்னீர்செல்வம் தனது உரையில் தெரிவித்தார். அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்களுக்கு அவர் பதிலடி கொடுத்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version