விசில் அடித்த தவெக கவுன்சிலர் சஸ்பெண்ட்: பரபரப்பான மாநகராட்சி கூட்டம்

திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த 19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சை பங்கேற்றார். அவர், தவெக துண்டை தோளில் அணிந்தபடியும், கையில் விசில் அடித்தபடியும் கூட்டத்திற்குள் வந்தார். இது திமுக மாமன்ற உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

மாமன்ற கூட்டத்தை கட்சி நிகழ்ச்சி போல நடத்தக்கூடாது என்றும், மன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாது என்றும் திமுக உறுப்பினர்கள் அல்லா பிச்சை மீது குற்றம் சாட்டினர். இதனால், திமுக மற்றும் தவெக மாமன்ற உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், தவெக உறுப்பினர் அல்லா பிச்சை வைத்திருந்த விசில் ஒன்றை திமுக உறுப்பினர்கள் பிடுங்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீண்டும் மீண்டும் விசில் அடித்ததால், மாமன்ற கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

மாமன்ற கூட்டத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும், அவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடையூறு செய்வதாகவும் கூறி, அல்லா பிச்சையை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த மேயர், மாமன்ற கூட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மாமன்ற விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சையை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து மேயர் உத்தரவிட்டார். இந்த திடீர் நடவடிக்கையால், மாமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த சம்பவம் திருநெல்வேலி மாநகராட்சி அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version