மிதுனம் ராசி: 2026 ஆனி மாதத்தில் பணவரவு, சுபகாரியங்கள் இனிதே நடைபெறும்!

மிதுன ராசி அன்பர்களே, பராபவ வருடம் ஆனி மாத கிரக நிலைகளின்படி, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவருடன் சூரியன் இணைந்து 'புத ஆதித்ய யோகத்தை' உருவாக்குகிறார். இதுவரை ராசியில் சஞ்சரித்த குரு பகவான் இப்போது 2-ம் இடத்தில் உச்சம் பெறுகிறார். இதனால் தனவரவு திருப்திகரமாக இருக்கும். பணம் பல வழிகளிலும் வந்து சேரும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் தானாக நடைபெறும், கொடுக்கல் வாங்கல்களில் இருந்த இடர்பாடுகள் அகலும்.

ஆனி மாதம் 5-6 தேதிகளில் (19/6.2026) செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்கிறார். அவர் விரய ஸ்தானத்திற்கு வருவதால் செலவு அதிகரிக்கும். வரவை விட செலவு கூடும். எனினும், சுபச் செலவுகளை மேற்கொள்வதன் மூலம் விரயங்களில் இருந்து விடுபடலாம். குடும்பத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கலாம். பத்திரப் பதிவில் இருந்த இடையூறுகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இது கடினமான காலமாக இருக்கும். உயர் அதிகாரிகள் பணிச்சுமையை அதிகமாகக் கொடுப்பர். திசாபுத்தி பலம் இழந்தவர்களுக்கு, உத்தியோகத்தில் இருந்து விலகிச் செல்லும் சூழல் உருவாகலாம்.

ஆனி 21-ந் தேதி (5.7.2026) அன்று சுக்ரன் சிம்ம ராசிக்கு செல்கிறார். அவர் சகாய ஸ்தானத்திற்கு வருவதால், பிள்ளைகளின் திருமணத்திற்காக ஒரு பெரும் தொகையை செலவிடுவீர்கள். குறிப்பாக பிள்ளைகளின் மேற்படிப்பிற்காகவோ அல்லது வெளிநாடு சென்று பணிபுரிவதற்காகவோ செய்யும் புதுமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து உங்களுக்கு கிடைத்த பங்கில் என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள். சகோதர வர்க்கத்தினரின் ஆதரவு திருப்தி தரும். அதிகப் பயணங்களின் விளைவாக ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படலாம்.

ஆனி 31-ந் தேதி (15.7.2026) அன்று சனி பகவான் உங்கள் ராசியில் வக்ரம் பெறுகிறார். அவர் நன்மைகளைத் தொடர்ந்து செய்தாலும், சில சமயங்களில் இனம்புரியாத கவலைக்கு ஆட்படுத்திவிடுவார். குரு பகவான் வீட்டில் சனி பகவான் சஞ்சரிப்பதால் குருவின் பார்வை அவர் மீது பதிகிறது. எனவே பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. சனியின் பார்வை 4, 7, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. தாயின் உடல்நலம் சீராகும். இடம் வாங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உங்களுக்கோ, உங்கள் உடன்பிறப்புகளுக்கோ வாழ்க்கைத்துணை அமைவதற்கான வாய்ப்புகள் பிறக்கும். பயணங்கள் அதிகரிக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற ஆசை நிறைவேறும். உத்தியோகத்தில் இடமாற்றம் உறுதியாகும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் திருப்தி தரும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ- மாணவிகளுக்கு கல்வியில் இருந்த குழப்பங்கள் அகலும். பெண்களுக்கு விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version