சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம்!

பொதுச் சாலைகளில் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் வாகனம் ஓட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், போக்குவரத்து காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விதிமீறல்களில் ஈடுபடும் சிறார்களின் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்களுக்கு ரூ.25,000 வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், சிறார்கள் ஓட்டிய வாகனத்தின் பதிவுச்சான்றிதழ் உடனடியாக ரத்து செய்யப்படும். இந்த அதிரடி நடவடிக்கை சாலை விபத்துகளைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் எடுக்கப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபட்ட சிறாருக்கு, அவர் 25 வயதை அடையும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்றும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, 18 வயது நிறைவடைவதற்கு முன்பாக எந்தக் காரணத்தைக் கொண்டும் வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சட்ட விதிமுறைகள் மூலம் சிறார்களின் வாகன விபத்துகள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version