மக்களை ஊழல்வாதி என விமர்சித்த அமைச்சர் விஜய் பாலாஜி – சர்ச்சை பேச்சு

ஈரோடு மாவட்டம் பவானியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், தவெக அமைச்சர் விஜய் பாலாஜி, தமிழ்நாட்டு மக்களை 'மிகப்பெரிய ஊழல்வாதிகள்' என்று பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்து மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, 'கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் ஊழல் செய்வதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்களாகிய நீங்கள் செய்ததுதான் மிகப்பெரிய ஊழல். வாங்க வேண்டிய இடத்தில் வாங்கிக்கொண்டு, குத்த வேண்டிய இடத்தில் சரியாக குத்தி நமது ஆட்சியை அரியணையில் கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறீர்கள்' என்று குறிப்பிட்டார். இந்த பேச்சு தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அமைச்சரின் இந்தப் பேச்சு, மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக ரீதியாக வாக்களித்து ஒரு ஆட்சியை தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு 'ஊழல்வாதிகள்' என பட்டம் சூட்டியது கண்டிக்கத்தக்கது எனப் பல தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்துள்ளன. இது ஒரு பொறுப்புள்ள அமைச்சர் செய்யக்கூடாத செயல் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தவெக அமைச்சர் விஜய் பாலாஜியின் இந்த கருத்து, தேர்தல் முடிவுகளை மக்கள் தங்கள் நலனுக்காக சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர் என்ற மறைமுகப் பொருளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், 'ஊழல்வாதி' என்ற வார்த்தை மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பாக மேலும் பல விவாதங்கள் எழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version