போதைப்பொருள் அல்ல, குழந்தைக்கான மாத்திரை – அமைச்சர் சரத்குமார் விளக்கம்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், அமைச்சர் சரத்குமார் ஒரு மாத்திரையை தூளாக்கி, அதை ஏடிஎம் அட்டை மூலம் சீராக ஒதுக்குவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து, இது போதைப்பொருள் பயன்பாடு தொடர்புடையது என கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் சரத்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இணைந்து ஒரு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். 'இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது எடுக்கப்பட்ட வீடியோ. அப்போது, எனது குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையை குழந்தையால் விழுங்க முடியாததால், அதை தூளாக்கிக் கொடுத்தேன். இதை தற்போது தவறாக சித்தரித்து சிலர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இது மிகுந்த வேதனை அளிக்கிறது' என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர் சரத்குமாரின் மனைவி ராதிகா கூறுகையில், 'தற்போது தவறான புரிதலோடு இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. கிரிக்கெட் விளையாட்டின்போது அவ்வளவு காவல்துறை பாதுகாப்பு இருந்தது. பொதுமக்களும் அங்கே அதிகம் இருந்தனர். இதுபோன்ற சூழலில் எப்படி போதைப்பொருள் பயன்படுத்த முடியும்?' என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோவை வெளியிடுவதன் மூலம் தவறான புரிதலுக்கு உரிய விளக்கம் அளிப்பதே தங்கள் கடமை என்றும் அவர் கூறினார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version