முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளேன் – மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம்

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள விஜய்க்கு மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,

"தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எனது நண்பர் விஜய்க்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

திரையில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களை விட, மிக உயர்ந்த ஒரு பொறுப்பை தமிழ்நாட்டு மக்கள் அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மலேசியாவும் தமிழ்நாடும் பல தலைமுறைகளாக ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சாரப் பிணைப்புகளைக் கொண்டுள்ளன.

வரும் ஆண்டுகளில் முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version